சீர்காழி சத்யா உட்பட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை!
![சீர்காழி சத்யா](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/4747b8a62aacef97f46d3b4d24659be5.png)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வருபவர் சத்யா. இவர், சீர்காழி சத்யா என அழைக்கப்படுகிறார். இவர் 5 கொலை வழக்கு உட்பட 32 வழக்குகளில் தொடர்புடையவராக போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். திண்டுக்கல் மோகன்ராமின் வலது கையாக செயல்பட்டு வருகிறார். இவர் அரசியல் கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல், பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் பரப்பு கூறப்படுகிறது. இவரிடம் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதா என்பது குறித்து சீர்காழி சத்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கும்பகோணத்தில் 2017ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ராஜாவை பழிவாங்க, குற்றவாளிகள் கோவை நீதிமன்றம் சென்று விட்டு திரும்பிய போது துப்பாக்கியால் சுட்டு 3 பேரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சீர்காழி முக்கிய குற்றவாளி விசிக பிரமுகர்களான சகோதரர்கள் இருவரை இரட்டை கொலை வழக்கிலும் சீர்காழி சத்யா குற்றவாளி.
சிறையிலிருந்து வெளியே வந்ததும் தலைமறைவான கடந்த சில மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சீர்காழி சத்யா தனது கூட்டாளிகள், அலெக்ஸ் சுதாகர், மாரிமுத்து மற்றும் பால்பாண்டி இவர்களுடன் பயங்கர ஆயுதங்களுடன் காரில் செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் வழியாக சென்னை செல்ல முயற்சி செய்ததாக தெரிகிறது. போலீசார் அவர்களை காரில் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
பிரதான சாலை வழியாக வந்தால் வாகன சோதனையில் சிக்கி விடுவோம் என செங்கல்பட்டில் இருந்து மலைப்பகுதியான பழவேலி வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். சத்யாவும் மற்றும் அவரது கூட்டாளிகளும் எதிர்த்தாக்குதல் நடத்த முயற்சித்தனர். சீர்காழி சத்யாவை கால் மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன் அவருடன் இருந்த கூட்டாளிகளையும் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரவுடி சத்யாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!