இனி விவசாயிகளுக்கு ரூ8000... மத்திய பட்ஜெட்டில் வெளியாகப் போகும் அறிவிப்பு!
இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாயிகள் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை தகுதியுள்ள விவசாயிகளுக்கு ரூ2000 வீதம் 3 தவணைகளாக வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளாக வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 22ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, PM கிசான் நிதி ரூ6000 முதல் ரூ8000 ஆக அதிகரிக்க வேளாண் வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா