அதிரடி அறிவிப்பு! இவர்களுக்கு லேப்டாப் இலவசம்!

 
அதிரடி அறிவிப்பு! இவர்களுக்கு லேப்டாப் இலவசம்!


இந்தியாவில் கொரோனா 2வது அலை பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பல மாநிலங்கள் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து வருகின்றன. மாணவர்களை கவரும் வகையில் பல்வேறு தனியார் பள்ளி, கல்லூரிகள் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

அதிரடி அறிவிப்பு! இவர்களுக்கு லேப்டாப் இலவசம்!

அந்த வகையில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வள பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கை செப்டம்பர் 9ம் தேதி வரை நேரடி முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு! இவர்களுக்கு லேப்டாப் இலவசம்!


அதன்படி, மூன்றரை ஆண்டுக்கால மீன்வள பட்டயப் படிப்பை முடித்த பின்னா், மீன் வளா்ப்பு பண்ணை, இறால் வளா்ப்பு, கடல் உயிரின உற்பத்தித் திறன், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் பணிபுரிய முடியும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இணையதளம் மூலமாக காணலாம்.


அதேபோல, சென்னை தரமணி சிபிடி வளாகத்துக்குள் செயல்படும் தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் தோல் தொழில்நுட்பவியல் சார்ந்த மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்கான சோ்க்கையும் நேரடி முறையில் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில் நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web