இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களிடையே ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை... நடராஜன் பேட்டி!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது பந்துவீச்சால் பல ரசிகர்களின் கவனம் ஈர்க்கப்பட்டார். இவர் யார்க்கர் போடுவதில் சிறந்து விளங்கிவருகிறார். நடராஜன், ஐ.பி.எல் போட்டியில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய போதிலும் உலக கோப்பை போட்டி மற்றும் ஜிம்பாவே போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் தான் உருவாக்கிய கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து பல வீரர்களையும் உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில் மதுரை வந்த நடராஜன் ”இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது” என பேட்டியளித்துள்ளார். அதில், "இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. காயங்கள் காரணமாக சில போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களின் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக இருந்து வருகிறேன் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடினேன். டி.என்.பி.எல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 கிரிக்கெட் வீரர்கள் உருவாகி உள்ளனர். டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.ல் கிரிக்கெட் தொடக்கத்தை விட தற்போது முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிகிறது. இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்க்கு பெற்றோர்கள் ஊக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். மீடியா முன் பேசுவதற்கு தயக்கமாக உள்ளது. பின்னர் எப்படி சினிமாவில் நடிப்பேன், சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை" எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!