20 கி வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்! போலீஸ் வலை வீச்சு!

 
20 கி வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்! போலீஸ் வலை வீச்சு!


தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரத்தில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினசரி வேலைகள் முடிந்ததும் இரவு அர்ச்சகர் கோவிலை பூட்டி விடுவார். அதே போல் கோவில் அர்ச்சகர் தண்டபாணி பூஜைகளை முடித்து கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
அடுத்த நாள் காலை 6 மணிக்கு அர்ச்சகர் கோவிலின் பிரதான கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.

20 கி வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்! போலீஸ் வலை வீச்சு!

அப்போது கோவிலின் உள்புறம் உள்ள கதவுகளின் பூட்டுகள் உடைந்து கிடந்தன. அக்கம் பக்கத்தினர் தகவல் அறிந்ததும் காவல்துறையில் புகார் அளித்தனர். உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்த காவல்துறையினர் திருட்டு நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
அதன்படி சுற்றுச்சுவர் மீது ஏறி மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பிடுங்கி தண்ணீரில் வீசி எறிந்தனர்.

20 கி வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல்! போலீஸ் வலை வீச்சு!

உள் பிரகாரத்தில் உள்ள 6 பூட்டுகளை உடைத்து வெள்ளிக் கவசங்கள், வெள்ளி வேல்கள் உட்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

From around the web