காதல் தோல்வி.. போதைக்கு அடிமையாகி வேலையை இழந்து தவித்த இளைஞர் தற்கொலை!

 
தற்கொலை

நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் கார்த்திக் (வயது 24). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ள முடியாது என இளம்பெண் கூறியுள்ளார். மேலும் அந்த இளம்பெண் கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்தினார்.

பள்ளி காதல்

இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் மனமுடைந்து மதுவுக்கு அடிமையானார். மேலும் மதுப்பழக்கம் அதிகரித்துள்ளதால் சரியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாழ விரும்பாத கார்த்திக் அவ்வப்போது தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். கடந்த 24ம் தேதி இரவு உணவு முடிந்து தனது அறைக்கு சென்ற கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் புதுமந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web