4 மாவட்டங்களுக்கு விடுமுறை ... கலெக்டர்கள் திடீர் அறிவிப்பு!
தமிழகத்தை பொறுத்தவரை பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகை காலங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் பண்டிகைகளும் சிறப்பு நாட்களும் வருவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29ம் தேதி ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்திற்கு ராஜராஜ சோழன் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா