கேரள லாட்டரி.. கோவில் பூசாரிக்கு விழுந்த 1 கோடி பரிசு!

 
மதுசூதனன்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை மேப்பாராவில் மகா விஷ்ணு கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரியாக மதுசூதனன் (வயது 52) என்பவர் வேலை செய்து வருகிறார். 20 ஆண்டுகளாக ஆன்மிக பணியில் ஈடுபட்டு வரும் இவர், அடிக்கடி கேரள அரசு லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி பிப்டி பிப்டி லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது. முதல் பரிசான ரூ.1 கோடியை மேல்சாந்தி மதுசூதனன் பெற்றார். இதை அறிந்த அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

ரூ.1 கோடி பரிசு  அவர் வாங்கியிருந்த 506060 என்ற லாட்டரி சீட்டிற்கு விழுந்தது.இது குறித்து மதுசூதனன் கூறுகையில், எனக்கு அடிக்கடி லாட்டரி சீட்டு எடுக்கும் பழக்கம் இருந்தது. சில சமயம் சின்ன சின்ன பரிசுகள் கிடைத்ததால் டிக்கெட் வாங்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. இந்நிலையில் முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதையறிந்த பக்தர்களும் என்னை வாழ்த்துகின்றனர் என்றார். மதுசூதனனுக்கு ஆதிரா என்ற மனைவியும், வைஷ்ணவ் என்ற மகனும், வைகலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web