தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் என இரு கட்சிகளும் பாஜக-விற்கு அடிமையாக உள்ளது – கரூர் எம்பி ஜோதி மணி.

 
தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் என இரு கட்சிகளும் பாஜக-விற்கு அடிமையாக உள்ளது – கரூர் எம்பி ஜோதி மணி.

கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி. ஜோதிமணி, புதுச்சேரியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டட்தில் பங்கேற்பதற்காக காரைக்கால் சென்று இருந்தார்.

பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி ஜோதிமணி கூறியதாவது., “புதுச்சேரியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி முதல் கிராமப் பஞ்சாயத்து வரை எல்லாப் பதவிகளுக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து இங்குள்ள தலைவர்களே முடிவெடுப்பார்கள்.

தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் என இரு கட்சிகளும் பாஜக-விற்கு அடிமையாக உள்ளது – கரூர் எம்பி ஜோதி மணி.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்றுவந்தாலும், தமிழகத்தில் அதிமுக எப்படி பாஜகவுக்கு அடிமையாக இருந்து, தேர்தலில் தோல்வியடைந்து, தற்போது கட்சியே கரையும் நிலைமையில் உள்ளது. 
அதுபோல புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு அடிமையாக உள்ளது. என் ஆர் காங்கிரஸ் ஆட்சியின் மேல் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் . அதனால், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று ஜோதிமணி தெரிவித்தார்

From around the web