இனிமே நடிகர் தனுஷ் நடிக்கக் கூடாது... தயாரிப்பாளர் சங்க தடை உத்தரவுக்கு நடிகர் கார்த்தி பரபரப்பு பேட்டி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் தடம் பதித்துள்ளார். ஜூலை 26ம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியான 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் அடுத்தடுத்த படங்களுக்கு பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதையடுத்து தனுஷின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் . ராயன் படத்தை தொடங்குவதற்கு முன்பே பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ராயன் படத்தை நடித்து ரிலீஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய நடிகர் கார்த்தி, தனுஷ் மீது இதுவரை எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை என்றும், இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சங்கத்துடன் கலந்தாலோசித்து பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!