எதிர்கட்சிகளின் குற்றசாட்டிற்கு பதிலடி கொடுத்த எம்பி கனிமொழி

 
எதிர்கட்சிகளின் குற்றசாட்டிற்கு பதிலடி கொடுத்த எம்பி கனிமொழி

காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூத்துகுடி மாவட்டம், தீத்தாம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி., மற்றும் சமூக நலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது செய்தியாளர்கள், திமுக ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என எதிர்கட்சிகள் கூறிவரும் குற்றசாட்டிற்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்துள்ளார்.

கனிமொழி எம் பி கூறியதாவது, “  எதையும் செய்யாதவர்கள் தி.மு.க ஆட்சியில் பல்வேறு காரியங்கள் செய்வதை பார்த்து பயந்து போய் தான் தி.மு.க ஆட்சி ஏதும் செய்யவில்லை என கூறி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் மற்றும் அ.தி.மு.கவினர் தி.மு.க ஆட்சி ஏதும் செய்யவில்லை என விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100 நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்த செயல்பாடுகள்தான் எதிர்க்கட்சிகள் மற்றும் அதிமுகவினரின் விமர்சனத்திற்கான பதில்” என்றார்.

From around the web