ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா?

 
ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா?


பாலிவுட் நடிகர்களில் முண்ணனியில் இருந்து வருபவர் ஷாரூக்கான். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்ட போது தான் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா?

இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு அவர் கோர்ட் விவகாரங்களில் பிசியாக உள்ளார். ஆர்யன் கான் ஜாமீனில் வெளியில் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஹிந்தியில் நயன்தாராவின் முதல் படம் இது.

ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா?

தற்போது இப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் நயன்தாரா ஷாரூக்கான் படத்தில் இருந்து விலகவில்லை. எப்போது படப்பிடிப்பு தொடங்கினாலும் அதில் நடிப்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார். இந்த படம் மட்டுமின்றி ஷாரூக்கானின் மற்ற படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web