ஆசியக்கோப்பை யாருக்கு... இன்று இந்தியா இலங்கை இறுதிப்போட்டி!
இலங்கையில் 9வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தம்புல்லாவில் நடைபெற்று வருகின்றன. 20 ஓவர் கொண்ட இந்தப் போட்டிகளில் 8 அணிகள் கலந்து கொண்டன. இந்த 8 அணிகளுக்குள் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இலங்கையும், இந்தியாவும் முன்னேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையும் இந்த போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 7 முறை சாம்பியனான இந்திய அணி 8வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
அதேவேளையில் ஏற்கனவே இறுதி சுற்றில் 5 முறை இந்தியாவிடம் தோல்வியை தழுவிய இலங்கை அணி முதல்முறையாக ஆசிய கோப்பை பட்டம் வெல்ல மிகக் கடுமையாக பயிற்சி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதனைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!