வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை... வருமான வரித்துறை திடீர் உத்தரவு!
இந்தியா முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 31 கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் வருமான வரி செலுத்துவது குறித்து வருமான வரித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்த இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளது. அத்துடன் வருமான வரி செலுத்துபவர்களுக்கு தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது வருமான வரி செலுத்தும் போது ரீபண்ட் பெறுவதற்கான தவறான தகவல்களை தெரிவிக்கக் கூடாது.இப்படி தவறான தகவல்கள் கொடுப்பது மற்றும் அந்த தகவல்களை மறைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுவரை இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அதில் மூன்றில் இரண்டு பங்கினர் புதிய வருமான வரி முறைப்படி தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் வருமான வரி செலுத்தும்போது ரீபண்ட் கேட்பவர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்நிலையில் அதில் ஏதேனும் தவறு இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!