சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்தவர், தனது இருசக்கர வாகனத்தை மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு, திடீரென பாலத்தின் மேலே ஏறி நின்று கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், போலீசாரின் விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்பது தெரிய வந்துள்ளது.
விருகம்பாக்கம் பகுதியில், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் மாணவியை மிரட்டிய நபர் யார் என விருகம்பாக்கம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதே விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் எனும் இளைஞர் தற்கொலைச் செய்து கொண்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா