பூஜை செய்தால் பணம் குட்டி போடும்! ரூ29 லட்சத்தை ஆட்டைய போட்ட மோசடி தம்பதி!

 
பூஜை செய்தால் பணம் குட்டி போடும்! ரூ29 லட்சத்தை ஆட்டைய போட்ட மோசடி தம்பதி!


தெலங்கானாவில் அதிலாபாத் மாவட்டம் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர்கள் சுக்ரீவ்- சங்கீதா தம்பதியினர். இவர்கள் பணம் வைத்திருப்பவர்களிடம் நட்பாக பழகி, சிறப்பு பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பு ஆக்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் வசித்து வரும் முகமது ஷாரூக் ஜூன் மாதம் 50000ஐ பூஜை செய்து 80 ஆயிரத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

அடுத்த முறை 1 லட்சம் ரூபாய்க்கு ஒன்றரை லட்சம் எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தனது வீட்டை விற்று 29 லட்சம் ரூபாயை முகமது ஷாரூக்கிடம் கொடுத்துள்ளார். அதை 40 லட்சமாக மாற்றி தருவதாக உறுதி அளித்ததை நம்பி பணத்தை ஒரு அறையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இரண்டு நாள் கழித்து வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த இடத்தில் யாருமே இல்லை. உடனடியாக இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மோசடி கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

From around the web