அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை !

 
அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை !

தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை !


அதில் இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை !


மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் . அக்டோபர் 17ல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web