தத்தளிக்கிறது பெங்களூரு!! கனமழையால் விமான நிலையம் நாசம்!! இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!!

 
தத்தளிக்கிறது பெங்களூரு!! கனமழையால் விமான நிலையம் நாசம்!! இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!!

நம்மூரு மழையைப் போல மாறிவிட்டது பெங்களூரு. பூங்காக்களின் நகரம் என்று இயற்கை விரும்பிகளின் சொர்க்க புரியாக திகழ்ந்த பெங்களூருவை இயற்கையே புரட்டி போட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், பெங்களூரு நகர் முழுவதுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக விமான நிலையம் முழுவதுமே வெள்ளநீரில் சூழப்பட்டு தத்தளித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெள்ளக்காடாக அந்த பகுதி முழுக்கவே காட்சியளிக்கிறது.

மேலும் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் பயணிகள் சென்ற வருகிறார்கள்.

அதேபோல் சர்வதேச விமான நிலையத்திற்கு (KIAL) வெளியே சாலைகள் வெள்ளத்தில் முழிக்கியுள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

From around the web