மாம்பலம் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட நடை மேம்பாலம்!

 
மாம்பலம் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட நடை மேம்பாலம்!


சென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம் தான். அதிலும் திநகர் , பாண்டிபஜார் கடுகு போட்டால் வெடித்து விடும் அளவுக்கு பண்டிகைகாலங்களில் கூட்டம் அலைமோதும்.
இதில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகருக்குள் நுழைபவர்கள் எண்ணிக்கையும் அதிகம் தான்.

மாம்பலம் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட நடை மேம்பாலம்!

இதனால் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசல், பண்டிகை காலங்களில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.
ஷாப்பிங் செய்ய வருபவர்களும் தி.நகருக்குள் நுழைபவர்களும் திணறும் நிலை ஏற்படுகிறது. இந்த நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்துக்கு இரும்பினாலான நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

மாம்பலம் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட நடை மேம்பாலம்!

இத்திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பார்ப்பவர்களுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த மேம்பாலம் காட்சியளிக்கிறது. இந்த பாலம் விரைவில் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web