தமிழக ஆளுநர் பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமனம்.!
Aug 27, 2021, 18:21 IST
தமிழகத்தில் கடந்த 2017 முதல் மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.இவருக்கு வயது 81. இவர் தமிழகத்தில் பொறுப்பேற்பதற்கு முன்னதாக அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்,
அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்திற்கு மட்டுமின்றி பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
From around the
web