குட்நியூஸ்! 19 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க எல்லைகள் திறப்பு!

 
குட்நியூஸ்! 19 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க எல்லைகள் திறப்பு!


உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன.

குட்நியூஸ்! 19 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க எல்லைகள் திறப்பு!

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தற்போது பாதிப்புக்கள் குறைந்து வரும் நிலையில் நவம்பர் மாதம் முதல் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

குட்நியூஸ்! 19 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க எல்லைகள் திறப்பு!

எனினும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சர்வதேச நாடுகள் கடந்த சில மாதங்களாக அமெரிக்க எல்லைகளைத் திறக்கக் கோரி விடுத்து வந்த கோரிக்கைகள் தற்போது அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web