குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!
Oct 19, 2021, 05:45 IST
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் ‘பணியிடங்களுக்கு செல்லாதவர்களுக்கு ஊதியம் கிடையாது என அறிவிக்கப் பட்டிருந்தது.
அத்துடன் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.இந்த போராட்டக் காலங்களில் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
From around the
web