சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதே ரீதியில் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டிருந்தால், அடுத்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை ரூ.1,000யைத் தொட்டு விடும் என்கிற அச்சம் இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது.

சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் சமையல் சிலிண்டரின் விலை சர்வதேச சந்தையை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சிலிண்டரின் விலை மட்டுமல்ல பெட்ரோல் , டீசல் விலையும் கூட இந்த முறையில் தான் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் , டீசல் விலை தினந்தோறும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறையும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன .

சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!


வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் 2020 டிசம்பரரில் 610 ரூபாயாக இருந்து வந்தது . படிப்படியாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ .15 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது . அதன்படி சென்னையில் சிலிண்டர் விலை ரூ .915 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் அக்.1 ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில் , தற்போது வீட்டு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web