வெள்ளத்தில் மூழ்கிய கோவில்! கயிறு கட்டி இழுக்கப்பட்ட பக்தர்கள்! விறு விறு நிமிடங்கள்!
Oct 16, 2021, 16:02 IST
தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது .அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்று திரும்பிய நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பக்தர்களை கயிற்றை கட்டி பத்திரமாக மீட்டனர்.
From around the
web