ஆங்கில பேச்சு திறன் பயிற்சி! அமைச்சர் அதிரடி!
Oct 17, 2021, 18:45 IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கள் குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பரவலை கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நவம்பர் 1 முதல் 1-8 ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பள்ளி நேரத்திற்கு பின் ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் எனவும் இதற்கான நடைமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
From around the
web