யானைக்கு நீச்சல் குளம்! ஸ்ரீரங்கத்தில் அதிரடி!
Oct 26, 2021, 09:32 IST
திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடத்தப்படும். உலகம் முழுவதும் உள்ள அரங்கனின் பக்தர்கள் இங்கு ஆண்டு முழுவதுமே வருகை புரிவது உண்டு.
ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் அமைந்துள்ளது “உடையவர் தோப்பு” . இங்கு 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
அந்த குளத்தில் கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார். இதற்கு பின்பு கோயில் இணை ஆணையர் முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி யானைகள் முதன் முறையாக குளித்து குதூகளித்தன.
From around the
web