தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்தும் சிபிஎஸ்இ க்கு – டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

 
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்தும் சிபிஎஸ்இ க்கு – டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை, நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்..

நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் இந்தி & ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும் (Major Subjects), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (Minor Subjects) பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன!

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்தும் சிபிஎஸ்இ க்கு – டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுக்கான பாடங்களை முதன்மைப் பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் என பிரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு வகைப்படுத்துவதன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த #CBSE முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது!.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவர்கள் விரும்பிப் படிக்காத நிலை உருவாகி விடும். அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல் தான். இதை சி.பி.எஸ்.இ கைவிட வேண்டும்!.

From around the web