9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளிலும் திமுக!

 
9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளிலும் திமுக!


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இதனால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளிலும் திமுக!

செங்கல்பட்டில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 இடங்களில் திமுகவும், 1 இடத்தை அதிமுகவும் கைப்பற்றியது. திமுக வேட்பாளர் செம்பருத்தி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழுப்புரத்தில் 28 உறுப்பினர்களில் திமுக கூட்டணி 27 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியது. இதனால் திமுக வேட்பாளர் ஜெயசந்திரன் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


கள்ளக்குறிச்சியில் 19 இடங்களையும் திமுக கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வேலூரில் 14 இடங்களில் அனைத்து இடங்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இதனால் திமுக வேட்பாளர் மு.பாபு மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பத்தூரில் 13 இடங்களையும் திமுகவே கைப்பற்றியதால் அக்கட்சியை சேர்ந்த சூர்யகுமார் போட்டியின்றி தேர்வானார்.
ராணிப்பேட்டையில் 13 இடங்களை திமுக கைப்பற்றியதால் ஜெயந்தி மூர்த்தி போட்டியின்றி தேர்வானார்.

9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளிலும் திமுக!


தென்காசியில் 14 இடங்களில் திமுக 10 இடங்களையும், கூட்டணி கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றின. இதனால் திமுக வேட்பாளர் தமிழ்செல்வி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் மொத்தம் உள்ள 12 இடங்களில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியதால் திமுக வெப்பாளர் ஜெகதீஷ் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

From around the web