திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஆதரவு கிடையாது.. இயக்குநர் பா ரஞ்சித் அறிவிப்பு!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரின் விசாரணைக் குறித்து ஆரம்பம் முதலே தனது அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் இதே ரீதியில் தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் திமுகவுக்கு தான் ஆதரவு கொடுக்க மாட்டேன் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்தும், வழக்கு விசாரணை குறித்தும் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்த இயக்குநர் பா ரஞ்சித் ஆவேசமாக சில கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
போலீசாரின் விசாரணைக் குறித்தும், கட்சி அலுவலகத்திலேயே இறுதி சடங்குகள் செய்து புதைப்பதற்கு தமிழக அரசு அனுமதியளிக்காதது குறித்தும் அப்போது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய பா.ரஞ்சித், திமுக அரசு குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று நடந்த திரைப்பட விழாவில் திமுகவுக்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றம் வரும் என்று நினைத்து தான் வாக்களித்தேன். ஆனால் திமுக, அதிமுக என எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை மீண்டும் நீடித்தால் திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஆதரவு கொடுக்க மாட்டேன் என்றும் இது ஒரு எச்சரிக்கை என்றும் இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராக இயக்குநர் பா. ரஞ்சித் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது இந்த பேச்சு திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா