பார்த்தது ஒரு குத்தமா?.. இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொடூரமாக கொன்ற போதை கும்பல்!

 
ஹர்ஷவர்தன்

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டம் சிஞ்சோலி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் (34). இவர் கடந்த 10 ஆண்டுகளாக பன்னர்கட்டா அருகே உள்ள சி.கே.பாலியாவில் தங்கி தனியார் பள்ளிகளுக்கு சீருடை சப்ளை செய்து வருகிறார். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சண்டை

இந்நிலையில் நேற்று இரவு மது அருந்துவதற்காக மதுக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, ​​பார் கேஷ் கவுண்டரில் குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல், 'ஏன் எங்களை முறைக்கிறாய்' என, ஹர்ஷ்வர்தனிடம் தகராறு செய்தனர். 'ஏன் என்னை அடிக்கிறீங்க' எனக் கேட்ட ஹர்ஷ்வர்தனை,  அந்த கும்பல் பீர் பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக சரமாரியாக குத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, ​​3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பன்னர்கட்டா போலீசார் ஜோசப், கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web