இரு பேருந்துகளுக்கு நடுவில் கைக்குழந்தையுடன் சிக்கிய தம்பதியினர் !

 
இரு பேருந்துகளுக்கு நடுவில் கைக்குழந்தையுடன் சிக்கிய தம்பதியினர் !

தமிழகத்தின் அண்டை மாநிலம் புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரையில் வசித்து வருபவர்கள் இந்த தம்பதியினர். இவர்கள் இருவரும் கைக்குழந்தையுடன் காலை ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். கல்மண்டபம் அருகே முன்னால் சென்ற தனியார் பேருந்தை ஓவர்டேக் செய்ய முயன்றனர். எதிர்பாராதவிதமாக எதிர்புறம் மற்றொரு பேருந்து வந்தது.

இரு பேருந்துகளுக்கு நடுவில் கைக்குழந்தையுடன் சிக்கிய தம்பதியினர் !


இந்த 2 பேருந்துகளுக்கும் ம் இடையில் ஸ்கூட்டருடன் தம்பதியர் சிக்கிக் கொண்டனர். இதை சைடு கண்ணாடியில் பார்த்த 2 பேருந்து டிரைவர்களும் உடனடியாக பேருந்தை பிரேக் அடித்து நிறுத்தினர். இருப்பினும் ஒரு பேருந்தின் மீது மோதிய பிறகு தான் ஸ்கூட்டர் நின்றது.

இரு பேருந்துகளுக்கு நடுவில் கைக்குழந்தையுடன் சிக்கிய தம்பதியினர் !


தக்க சமயத்தில் டிரைவர்கள் சமயோசிதமாக செயல்பட்டதால் மூவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. அப்போது ஸ்கூட்டரில் வந்த பெண் தனது கணவரை திட்டித்தீர்த்தார்.
இந்த பரபரப்பு சம்பவம் முழுவதும் பேருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web