அதிரடி சரவெடி... அதிகாரிகளுக்கு இணையான விடுப்பு... முப்படை வீராங்கனைகள் கொண்டாட்டம்!!
ஆயுதப்படைகளில் ஆண்வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகளும் பணிபுரிந்து வருகின்றனர். ஆயுதப்படையை பொறுத்தவரை பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே சிறப்பு விடுப்புக்கள். பெண் வீராங்கனைகள், பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப் படை வீராங்கனைகளுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அதிகாரிகளுக்கு இணையாக வழங்குதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.இதன் மூலம் பாதுகாப்புப் படைகளில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும், அதிகாரி மட்டுமல்ல அவர் வேறு எந்தப் பதவியில் இருந்தாலும், இத்தகைய விடுப்புகள் சம அளவில் கிடைக்கும். ஆயுதப்படைகளில் அனைத்து பெண்களுக்கும், பதவிகளைப் பொருட்படுத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுப்பு விதிகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக விரிவுபடுத்துவது என்பது, ஆயுதப்படைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்குப் பலனளிக்கும். இந்த நடவடிக்கை ராணுவத்தில் பெண்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதோடு, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்த உதவுகிறது. முப்படைகளிலும் பெண்களைச் சேர்ப்பதன் மூலம் ஒரு முன்னுதாரணமான மாற்றத்தை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெண் அக்னி வீராங்கனைகளை நியமிப்பதன் மூலம், நாட்டின் நிலம், கடல் மற்றும் வான் எல்லைகளைப் பாதுகாப்பதில் பெண்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தி நிறைவாக ஆயுதப்படைகளுக்குக் கிடைக்கும்.மேலும் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது, போர்க்கப்பல்களில் பணியமர்த்தப்படுகின்றனர். 2019 ல் இந்திய ராணுவத்தில் பெண்களை ராணுவக் காவல் படையில் வீரர்களாக நியமித்ததன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது என பெருமிதமாக கூறியுள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!