ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி! தொடரும் சோகம்!

 
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி! தொடரும் சோகம்!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது ஆண் குழந்தை, கர்நாடகாவில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இந்த குழந்தையை மீட்பதற்கு கடந்த 24 மணி நேரமாக நிகழ்ந்த போராட்டமும், முயற்சியை பலனளிக்காமல் போனது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி! தொடரும் சோகம்!

கர்நாடகா, ஆலக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹசாரே என்பவரின் இரண்டரை வயது ஆண் குழந்தை வீட்டி முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, திடீரென விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்தனர். எவ்வளவு தேடியும் குழந்தை சரத் கிடைக்காததால், குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று ஹாருகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பதிவு செய்து கொண்ட போலீசாரும், குழந்தை சரத்தை தேடி வந்த நிலையில், அவர்களது வீட்டில் இருது 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் 15 அடி ஆழத்தில் குழந்தை சரத் விழுந்து சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது . குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்து பெற்றோர் கதறியழுதனர்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி! தொடரும் சோகம்!

பின்னர், குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசாரும், தீயணைப்பு படையினரும், குழந்தை சரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரமானதால் தண்ணீர், உணவும் இன்றி மிகவும் சோர்வாக குழந்தை இருந்துள்ளான். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வந்த நிலையில், 24 மணி நேரம் கடந்த நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமலும், தண்ணீர் கிடைக்காமலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை சரத் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. குழந்தையின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது . ஆழ்துளை கிணற்றை தோண்டியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

From around the web