நாளை முதல்வர் பருவமழை குறித்து ஆலோசனைக் கூட்டம்!

 
நாளை முதல்வர் பருவமழை குறித்து ஆலோசனைக் கூட்டம்!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு கிடைக்கும்.

நாளை முதல்வர் பருவமழை குறித்து ஆலோசனைக் கூட்டம்!

இதன் காரணமாக ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூா்வாரப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மண்டலம் வாரியாக சிறப்பு அதிகாரிகள் இப்பணிகளை மேற்பார்வையிடவும், விரைந்து முடிக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஆலோசனை கூறும் வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனா். இவா்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாளை முதல்வர் பருவமழை குறித்து ஆலோசனைக் கூட்டம்!


இந்நிலையில் முதல்வர் நாளை செவ்வாய்கிழமை 26ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட ஆட்சியா்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
முதல்வர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமை செயலாளா் இறையன்பு, வருவாய் பேரிடா் துறை முதன்மை செயலாளா், அரசு துறை செயலாளா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் என பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

From around the web