செவ்வாயில் புதுக்காரியத்தை தொடங்கலாமா?

 
செவ்வாயில் புதுக்காரியத்தை தொடங்கலாமா?

செவ்வாய் கிழமைகளை வெறும் வாய் என்பார்கள். அதன் உண்மையான பொருள் அன்றைய தினம் அம்பிகையை நினைத்து வெறும் வாயாக அதாவது உபவாசம் இருப்பது. ஆனால் நல்ல செயல்களை செவ்வாய்கிழமைகளில் செய்யக்கூடாது எனத் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம்.

வீட்டில் ஒரு புதுப்புடவை கட்டுவதற்கு கூட செவ்வாய்கிழமை அதுவுமா புதுப்புடவை கட்டலாமா? நாளைக்கு கட்டியிருக்கலாமே ?என்பார்கள் பலர். புதுப்புடவை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு… ஜோதிடங்களை முழுமையாக நம்பவில்லை என்றாலும் அவை எல்லாம் விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டவை .

செவ்வாயில் புதுக்காரியத்தை தொடங்கலாமா?

திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். அதிலும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழியை வைத்து புதன்கிழமை மட்டுமே நல்ல நாள் என்று நினைப்பவர்களும் உண்டு.
ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாள்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள்.

நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். செவ்வாய்க் கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுப்பலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.

செவ்வாயில் புதுக்காரியத்தை தொடங்கலாமா?

மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது.

இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளன். மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர்.

அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால்தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு.

செவ்வாயில் புதுக்காரியத்தை தொடங்கலாமா?

இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ் ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும் என்பது ஐதிகம்.

From around the web