உஷார் மக்களே... இனி வரும் நாட்களில் வெப்பநிலை உயரும்!

பத்திரம் மக்களே... ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க. குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை வெளியே வெயிலில் தனியாக அனுப்பாதீங்க. இனி வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இப்போதே வெயில் கொளுத்தி வருகிறது. இனி வரும் நாட்களில் வெயில் தாக்கம் எப்படி இருக்கும் என பொதுமக்கள் கவலையில் இருக்கும் நிலையில், இது குறித்து சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 16ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் மார்ச் 17ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மார்ச் 20ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.மேலும் நாளை முதல் 17ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!