2 நாடுகளும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தடை!
33 வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் மொத்தம் 206 நாடுகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் 10,500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த போட்டி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டாலும் குறிப்பாக இரண்டு நாடுகளுக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா உக்ரைனுக்கு நாட்டுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. போரினை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பல வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் யாருடைய பேச்சையும் ரஷ்யா காது கொடுத்து கேட்க தயாராக இல்லை.
அதனால்தான் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ரஷ்ய நாட்டுக்கு போரில் பெலாரஸ் நாடு உதவி செய்து வருகிறது. அதனால் பெலாரஸ் நாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என ரஷ்யாவிடம் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வலியுறுத்தியது. ஆனாலும் ரஷ்யா ஏற்க மறுத்ததால் தான் இரு நாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!