ரூ.250 கோடி சொத்து!! தேர்தலில் நிற்கிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி!

 
ரூ.250 கோடி சொத்து!! தேர்தலில் நிற்கிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி!

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் பங்காரு அடிகளார் மனைவி. இதே பதவிக்கு அவரது மகனும் போட்டியிடுகின்றனர்.

ரூ.250 கோடி சொத்து!! தேர்தலில் நிற்கிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி!

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஊராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி இதற்கு முன்னர் 2 முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஊராட்சி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், இவர்கள் மேல்மருவத்தூரில் போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ரூ.250 கோடி சொத்து!! தேர்தலில் நிற்கிறார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி!

இவர்கள் இருவரை தவிர மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இவர்களது மனுக்கள் ஏற்கப்பட்டால், அதில் ஒருவர் மனுவை திரும்பப் பெற வாய்ப்புள்ளது. தனது வேட்பு மனுவில், பங்காரு அடிகளார் மனைவியின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

From around the web