ஆகஸ்ட் 7ம் தேதி விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்கள் அடிப்படையில் விடுமுறைகள் அளிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவில் மிகப்பெரியது. இதனாலேயே இது "கோட்டை பெரிய மாரியம்மன்" என அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் இந்த கோவில் அம்மனுக்கு உண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 31 பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா