கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஆர்யா! குவியும் பாராட்டுக்கள்!

 
கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஆர்யா! குவியும் பாராட்டுக்கள்!

அப்துல்கலாமின் 90வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை மாணவர்கள் தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் , அதிகாரிகள், பிரபலங்கள் பலரும் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஆர்யா! குவியும் பாராட்டுக்கள்!

அவரது குடும்பத்தினர் அவரது மணிமண்டபத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். தமிழகம் முழுவதுமே இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் எனப் பலரும் மரம் நடுதல் , அவரது கருத்துக்களை பரப்புதல் என அவர் இட்டு சென்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்தி அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், நடிகர் ஆர்யா இன்று செம்மொழிப் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஆர்யா! குவியும் பாராட்டுக்கள்!

இது குறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில்
“அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள் அன்று நான் மரக்கன்று நடுவேன் என மறைந்த நடிகர் விவேக்கிற்கு வாக்குறுதி அளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று மரக்கன்று நடுகிறேன்.

எனது ரசிகர்களை மரம் நட அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். அவரது செயலுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலரும் அவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web