ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 26 பேர் இன்று நேரில் ஆஜர்... கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு தீவிரம்!

 
ஆம்ஸ்ட்ராங்

 தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ்,  வழக்கறிஞர் அருள், சிவசக்தி,  ஹரிஹரன்,  மலர்க்கொடி,  அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், ரவுடி நாகேந்திரன் , ரவுடி புதூர் அப்பு , சீசிங் ராஜா உட்பட  28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  

ஆம்ஸ்ட்ராங்

அவர்களில் 25 பேருக்கு  எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இது வழக்கில்  திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.   இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும்  விக்னேஷ் குமார், விஜயகுமார்  மற்றும் திருவள்ளூர் நத்தமேடு நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரின்  ஜாமீன் மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்

 இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று அறிவுரை கழகத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட  26 பேர்  சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதனையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web