தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும்... பஞ்சாங்கத்தின் கணிப்பு!

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்
மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும்.
அந்நிய நாடுகளின் முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வரலாம்.
தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும்.
மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும்.
நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.
ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும்.
இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும்.
விளையாட்டு துறையில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!