துரத்தும் சோகம்! பிரபல நடிகைக்கு மீண்டும் கொரோனா!! தடுப்பூசி போட்டும் ஏற்பட்ட பாதிப்பு!!

 
துரத்தும் சோகம்! பிரபல நடிகைக்கு மீண்டும் கொரோனா!! தடுப்பூசி போட்டும் ஏற்பட்ட பாதிப்பு!!

ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டு, குணமான பின்னர், தடுப்பூசி செலுத்தியும் மீண்டும் பிரபல நடிகை பிரக்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது திரையுலகினரை அதிர செய்துள்ளது.

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தமிழ் திரையுலகில் விரட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து அகண்டா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பிரக்யாவிற்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு அதில் இருந்து மீண்டதாக அறிவித்தார். தற்போது 2 வது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

துரத்தும் சோகம்! பிரபல நடிகைக்கு மீண்டும் கொரோனா!! தடுப்பூசி போட்டும் ஏற்பட்ட பாதிப்பு!!

அதில், ’எனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனாவால் 2வது முறை பாதிக்கப்பட்டிருக்கிறேன்.இதனால் மீண்டும் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web