கழக போராளியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது... நடிகர் விஜய் இரங்கல்!
புதுச்சேரி தவெக செயலாளர் சரவணன் திடீர் மாரடைப்பால் நேற்று மாலை உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்து கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும்…
— TVK Vijay (@tvkvijayhq) October 22, 2024
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.விஜய் மாநாட்டு பணியில் ஈடுபட்டுவிட்டு, வீடு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் (47) திடீரென நேற்று மாலை உயிரிழந்தார்.நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் புதுவை மாநில செயலர் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த சரவணனனுக்கு, மனைவி தேவியும் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சரவணன் நடிகர் விஜயின் தீவிர ரசிகராகவும், ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வந்துள்ளார்.
தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், த.வெ.கட்சியின் புதுவை மாநிலச் செயலராகவும், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்து வந்தார். இம்மாதம் 27ம் தேதியன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார்.
பல நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், புதுச்சேரி திரும்பிய அவர் நேற்று மாலை வீட்டில் இருந்த போது திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.அவரது குடும்பத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், சரவணனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து சரவணன் உடல் புதுச்சேரி, சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!