நெஞ்சை உலுக்கும் சோகம்... நடிகர் சூர்யா வேதனை!
கேரளாவில் தொடர் கனமழை காரணமாக மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர்.
.#WayanadLandslide my thoughts and prayers with the families.. Heartbreaking..! Respects to all members of Government agencies and people on the field helping the families with rescue operations 🙏🏼
— Suriya Sivakumar (@Suriya_offl) July 31, 2024
இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டு வருகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா “வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தனது x -தளத்தில், “வயநாடு நிலச்சரிவு சம்பவதால் எனது இதயம் நொறுங்கிவிட்டது. எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு ஏஜென்சிகள் மற்றும் பொது மக்களுக்கும் மரியாதையை செலுத்துகிறேன் ” என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!