கேஜிஎப்பில் நடிகர் அஜீத் குமார்?! ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. அஜீத்குமார் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி படத்தை நிறைவு செய்யவுள்ள நடிகர் அஜித் குமார் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டு வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் பக்காவாக பிளான் போட்டு ஒவ்வொரு ஷெட்யூலாக முடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படம் நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகலாம் என்கிறது படக்குழு வட்டாரம். அதே நேரத்தில் கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல். யஷ் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய நிலையில், தெலுங்கில் பிரபாஸ் நடித்த சலார் 1 படத்தை இயக்கியும் வெற்றிக் கண்டார்.
அடுத்து சலார் 2 படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அடுத்து அஜித்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேஜிஎஃப் யூனிவர்ஸில் அஜித்குமார் ஒரு முக்கிய அங்கமாக இணையப் போவதாகவும், கேஜிஎஃப் 3 படத்தில் யஷ் மற்றும் அஜித் குமார் இணைந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா