ஆனந்த வாழ்வு தரும் ஆடி பௌர்ணமி... இப்படி வழிபாடு செய்து பாருங்க!
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருகிறது. இந்த தினத்தில் வானில் முழு நிலவு பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். மற்ற நாட்களை விட இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அதிலும் இன்று அம்பிகையின் அருள் கடாட்சம் நிறைந்த ஆடிப் பௌர்ணமி.
பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம் என்பது ஐதிகம். இன்று அம்பிகை வழிபாடும், பூஜைகளும் சகல சௌபாக்கியங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.
வீட்டில் வழிபடும் முறை
பௌர்ணமி தினமான இன்று மாலை வானில் முழு நிலவு பிரகாசிக்க தொடங்கிய பிறகு சந்திர தரிசனம் செய்து வீட்டில் பூஜை அறையில் குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சிக்கலாம்.
இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம். நீடித்த ஆயுள் , குழந்தை பாக்கியம். தனலாபம், கல்வியில் வளர்ச்சி என வேண்டும் வரம் பெறலாம். இன்றைய தினம் வீடுகளில் சத்ய நாராயணா பூஜை செய்யலாம். பௌர்ணமி தினத்தில் சந்திரனின் கதிர்வீச்சு முழுவதுமாக பூமியில் படுவதால் பாசிட்டிவ் அதிர்வலைகள் நிறைந்திருக்கும். இந்த நாளில் அம்பிகை வழிபாடு செய்யலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் .
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா