ரசிகர்கள் அதிர்ச்சி... படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை சமந்தா!
சிட்டாடெல் படப்பிடிப்பின் போது, ஷூட்டிங் ஸ்பாட்லேயே மயங்கி விழுந்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விவாகரத்துக்கு பின்னர், படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், ஒரு வருடம் நடிக்காமல் இருந்த நிலையில், மீண்டும் நடித்து வரும் சமந்தா, இந்தி படமொன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்கள். அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்ததாக சமந்தா கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போதுதான் நான் ‘சிட்டாடல்’ வெப் தொடர் மற்றும் ‘குஷி’ படத்தில் பிஸியாக நடித்தேன். குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. அதில் மிக அதிகமான ஆக்சன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு நான் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன். அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டி உதவியதால் அந்தப் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சி ஆனேன் என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!