தங்க மகன் மாரியப்பனுக்கு ரூ75,00,000 ஊக்கத்தொகை ... ஸ்டாலின் வாழ்த்து!
சீனாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாற்று திறனாளிகளுக்கான 11வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள 100 நாடுகளில் உள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவை ஊக்கப்படுத்திய தமிழ்நாட்டின் தலைமகன்...#CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @Udhaystalin @Chief_Secy_TN pic.twitter.com/e7CfJZggfd
— TN DIPR (@TNDIPRNEWS) June 11, 2024
இந்த தொடரில் தடகள வீரரான தமிழகத்தை சேர்ந்த ‘பாரா’ தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்துகொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் தனது 5 வயதில் பேருந்து விபத்தில் சிக்கியதால் வலது முழங்கால் முற்றிலும் செயலிழந்தது. தன்னுடைய விடாமுயற்சியால் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். இவரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து துனிசியாவில் நடந்த பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் மாரியப்பன், ரியோ பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தங்கம் வென்று சாதித்தார்.அதன்பின் இந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் மேலும் சிறப்பாக விளையாடி தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!