அலெர்ட்... தமிழகத்தில் 7நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை!
இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தொடர் மழை பல பகுதிகளில் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஜூலை 27ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கனமழையும் பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா